Samacheer Kalvi 7th History Term 2 Unit 1 Social Book Back Question and Answers:
Samacheer Kalvi 7th Standard New Social Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. Class 7 New Syllabus 2021 to 2022 Book Back Question & Answer solutions available for both English and Tamil Medium. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தக வினா – விடைகள் பருவம் 2 அலகு 1 – விஜயநகர், பாமினி அரசுகள் Answers/Solutions are provided on this page. 7th Std Social Book is of 1st Term consists of 10 units, 2nd Term consists of 07 units and Term 3rd consists of 10 Units. All Units/Chapters of Term 1st, 2nd, 3rd Social Book Back One, and Two Mark Solutions are given below.
Check Unit wise and 7th New Social Book Back Question and Answers Guide/Solutions PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Questions and Answers available in PDF. Check Social Science – History, Geography, Civics, Economics below. See below for the Samacheer Kalvi 7th Social Science History Book Back Unit 1 Term 2 Answers PDF in Tamil:
Samacheer Kalvi 7th Social History Book Back Unit 1 Term 2 Answers/Solutions Guide PDF:
7th Social Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.
அலகு 1: விஜயநகர், பாமினி அரசுகள் வினா- விடைகள்.
சமூக அறிவியல் – வரலாறு
பருவம் 2 – அலகு 1
விஜயநகர், பாமினி அரசுகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. சங்கம வம்சத்தின் மிக சிறந்த ஆட்சியாளர் யார்?
அ) புக்கர்
ஆ) தேவராயா – II
இ) ஹரிஹரர் – II
ஈ) கிருஷ்ண தேவராயர்
விடை: ஆ) தேவராயா – II
2. விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?
அ) யானை
ஆ) குதிரை
இ) பசு
ஈ) மான்
விடை: ஆ) குதிரை
3. சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?
அ) ராமராயர்
ஆ) திருமலதேவராயா
இ) இரண்யம் தேவராயர்
ஈ) இரண்டாம் விருபாக்சராயர்
விடை: ஈ) இரண்டாம் விருபாக்சராயர்
4. மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்
அ) சாளுவ நரசிம்மர்
ஆ) இரண்டாம் தேவராயர்
இ) குமார கம்பண்ணா
ஈ) திருமலை தேவராயர்
விடை: இ) குமார கம்பண்ணா
5. பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர்
அ) அலாவுதீன் ஹசன்விரா
ஆ) முகம்மது – 1
இ) சுல்தான் பெரோஸ்
ஈ) முஜாஹித்
விடை: இ) சுல்தான் பெரோஸ்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. ஆரவீடு வம்சத்தின் தலைநகரம். ………………………..
விடை: பெனுகொண்டா
2. விஜயநகரப் பேரரசர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களுக்கு ………………. என்று பெயர்
விடை: வராகன்
3. மகமது கவான் வெடிமருந்து தயாரிக்கவும் அதனைப் பயன்படுத்துவது பற்றி விளக்குவதற்காகவும் …………………… வேதியியல் அறிஞர்களை வரச் செய்தார்.
விடை: பாரசீக
4. விஜயநகர் நிர்வாகத்தில் கிராம விவகாரங்களை ……………. கவனித்தார்.
விடை: கௌடா என்ற கிராமத்தலைவர்
III. பொருத்துக:
விடை:
IV. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக: பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும் 1:
1. கூற்று : இந்தியாவில் விஜயநகர அரசின் இராணுவம் அச்சுறுத்தக் கூடியதாக இருந்தது.
காரணம் : விஜயநகர இராணுவம் பீரங்கிப்படை மற்றும் குதிரைப்படையை கொண்டிருந்தது.
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
இ) காரணம் மற்றும் கூற்று தவறு
ஈ) காரணம் மற்றும் கூற்று சரி
விடை: ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
2. தவறான இணையைக் கண்டறியவும்
அ) பட்டு – சீனா
ஆ) வாசனைப் பொருட்கள் – அரேபியா
இ) விலைமதிப்பற்ற கற்கள் – பர்மா
ஈ) மதுரா விஜயம் – கங்கா தேவி
விடை: ஆ) வாசனைப் பொருட்கள் – அரேபியா
3. பொருந்தாததைக் கண்டுபிடி :
அ) ஹரிஹரா – II
ஆ) மகமுது – 1
இ) கிருஷ்ண தேவராயர்
ஈ) தேவராயா – 1
விடை: ஆ) மகமுது – 1
4. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டு காட்டவும்
I. பச்சைக்கலந்த நீலவண்ணத்தைக் கொண்ட விலையுயர்ந்த கற்களால் ஆன அரியணை பாரசீக அரசர்களின் அரசவையை அலங்கரித்தன என பிர்தௌசி தன்னுடைய ஷா நாமா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
II. விஜயநகர, பாமினி அரசர்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்குக் கிருஷ்ணாதுங்கபத்ரா நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதி மற்றும் கிருஷ்ணாகோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட கழிமுகப் பகுதியே காரணமாக அமைந்தன.
III. முதலாம் முகமது முல்தானில் கல்வி பயின்றார்.
IV. முகமது கவான் மூன்றாம் முகமதுவின் கீழ் தனித்தன்மை மிக்க பிரதம அமைச்சராக பணியாற்றினார்.
அ) I, II மற்றும் IV சரி
ஆ) I, II மற்றும் III சரி
இ) II, III மற்றும் IV சரி
ஈ) III மற்றும் IV சரி
விடை: அ) I, II மற்றும் IV சரி
V. சரியா? தவறா?:
1. பாமினி அரசைத் தோற்றுவித்தவர்கள் ஹரிஹரா மற்றும் புக்கர் ஆவார்கள்
விடை: தவறு
2. இருபது ஆண்டுகள் ஆட்சி செய்த கிருஷ்ணதேவராயர் சங்கம வம்சத்தின் மிகச்சிறந்த அரசராவார்
விடை: தவறு
3. அஸ்டதிக்கஜத்தில் அல்லசானி பெத்தண்ணா குறிப்பிட தகுந்தவராவார்
விடை: சரி
4. விஜயநகரப் பேரரசில் அரசுரிமை என்பது பரம்பரையாகவும், பிறப்புரிமையின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது.
விடை: சரி
5. பாமினி அரசில் 18 முடியரசுகள் இருந்தன
விடை: சரி
VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்:
1. விஜயநகர் பேரரசின் நான்கு வம்சங்களின் மிகச் சிறந்த ஆட்சியாளர்களை எழுதுக.
விடை:
- சங்கம் வம்சம் – தேவராயர் – II
- சாளுவ வம்சம் – சாளுவ நரசிம்மா
- துளுவ வம்சம் – கிருஷ்ணதேவராயர்
- ஆரவீடு வம்சம் – திருமலைதேவராயர்
2. தலைக்கோட்டைப் போரைப் பற்றி எழுதுக.
விடை:
- விஜயநகருக்கு எதிராகப் போர் புரிவதற்காகத் தக்காண சுல்தான்கள் ஓர் அணியில் திரண்ட னர்.
- எதிரிகளின் கூட்டுப் படைகள் 1565 -ல் தலைக்கோட்டை என்னுமிடத்தில் விஜயநகரப் படைகளை எதிர் கொண்டனர்.
- ராக்சச தங்கம் (தலைக்கோட்டைப் போர்) என்றறியப்பட்ட இப்போரில் விஜயநகரம் தோற்கடிக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டது. இறுதியில் விஜயநகரப் பேரரசு அழிக்கப்பட்டது.
3. விஜயநகர அரசின் அரசமைப்பு முறையைப் பற்றி எழுதுக.
விடை:
- பேரரசு பல்வேறு மண்டலங்கள் (மாநிலம்) நாடுகள் (மாவட்டங்கள்), ஸ்தலங்கள் (வட்டங்கள்) கிராமங்கள் என பிரிக்கப்பட்டிருந்தது.
- ஒவ்வொரு மண்டலமும் மண்டலேஸ்வரா என்ற ஆளுநரின் கீழிருந்தது.
- கிராமம் நிர்வாகத்தின் மிகச்சிறிய அலகாகும் கிராமத்தில் கிராம சபை என்ற அமைப்பு இருந்தது.
- கிராமத்தை கௌடா என்ற கிராமத்தலைவர் நிர்வாகித்தார்.
4. தக்காண சுல்தானத்தின் ஐந்து சுதந்திர அரசுகள் யாவை?
விடை:
- பிடார்
- அகமதுநகர்
- பெரார்
- கோல்கொண்டா
- பிஜப்பூர்
5. அலாவுதீன் ஹசன் ஷா கல்விக்கு ஆற்றிய பங்களிப்பைக் கூறுக.
விடை:
- அலாவுதீன் ஹசன் ஷா, அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதி ஜாபர்கான் முயற்சியால் மூல்தானில் கல்வி கற்றார்.
- பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் போர்ப் பயிற்சி பெறுவதற்காக பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தினார்.
VII. விரிவாக விடையளிக்க:
1. கிருஷ்ண தேவராயரின் பணிகள் மற்றும் சாதனைகளைக் குறிப்பிடுக.
விடை:
- கிருஷ்ணதேவராயர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் துங்கபத்ரா நதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் சுதந்திரமாக செயல்பட்டு வந்த தலைவர்களை அடக்கினார். இதுவே அவரது முதல் மற்றும் தலையாய பணியாக இருந்தது.
- பின்னர் குல்பர்காவை கைப்பற்றினார்.
- சிறைவைக்கப்பட்டிருந்த பாமினி சுல்தான் முகமது ஷா-வை விடுவித்து மீண்டும் அரியணையில் அமர்த்தினார்.
- ஓடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர் பிராதாபருத்திரனோடு போர் மேற்கொண்டார். பின் சமாதானத்தை விரும்புவதாகவும், தன் மகளை மணமுடித்து தருவதாகவும் கூறிய பிரதாபருத்திரனின் பகுதிகளை மீண்டும் அவருக்கே வழங்கினார்.
- போர்ச்சுக்கீசிய வீரர்களை உதவியோடு கோல்கொண்டா சுல்தானை தோற்கடித்தார்.
- பிஜப்பூர் சுல்தானிடமிந்து ரெய்ச்சூரைக் கைப்பற்றினார்
- மழைநீரைச் சேமிக்க நீர்ப்பாசன குளங்கள் நீர்த்தேக்கங்கள் உருவாக்கினார்.
- தலைநகரில் கிருஷ்ணசாமி கோயில், வித்தலசாமி ராமசாமி போன்ற புகழ்பெற்ற கோவில்களையும் வலிமைமிக்க கோட்டைகளையும் கட்டினார்.
- போர்கள் மூலம் பெற்ற செல்வங்களைக் கொண்டு கோபுரங்கள் நிறுவினர். அக்கோபுரங்கள் ராயபுரம் என அவா பெயருக்கு புகழ் சேர்க்கும் வண்ணம் அழைக்கப்பட்டது.
- பெரும் படையை நிறுவிய அவர் அரேபியா ஈரானிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்தார்.
- போர்ச்சுக்கீசிய, அராபிய வணிகர்களுடன் கொண்டிருந்த நட்புறவால் நாட்டின் வருமானம் அதிகரித்தது.
VIII. உயர் சிந்தனை வினா:
1. விஜயநகர் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள் மற்றும் பாமினி சுல்தான்களின் பங்களிப்பை ஆராய்க.
விடை:
கிருஷ்ண தேவராயருக்குப் பின் விஜயநகருக்கு எதிராக போர் புரிவதற்காகத் தக்காண சுல்தான்கள் ஓர் அணியில் திரண்டனர். எதிரிகளின் கூட்டுப்படைகள் 1565-ல் தலைக்கோட்டை என்னுமிடத்தில் விஜயநகரை எதிர்கொண்டன. இதில் விஜயநகரம் தோற்கடிக்கப்பட்டது. விஜயநகரம் இருந்த இடம் தற்போது ஹம்பி என அழைக்கப்படுகிறது.
பாமன்ஷாவைத் தொடர்ந்து முதலாம் முகமது ஷா அரச பதவி ஏற்றார். விஜயநகரோடு அவர் மேற்கொண்ட இரு போர்களினால் பயனேதும் ஏற்படவில்லை. ஆனால் 1368-ல் வாரங்கல் அரசரோடு போரிட்டதின் மூலம் கோல்கொண்டா கோட்டை, பச்சை கலந்த நீலவண்ணக் கற்களால் செய்யப்பட்ட சிம்மாசனம் இழப்பீடாக பெற்றார். இச்சிம்மாசனமே பாமினி சுல்தான்களின் அரியணை ஆயிற்று.
IX. வரைபடம்:
1. விஜயநகர் மற்றும் பாமினி அரசுகளின் எல்லைகளைக் குறிப்பிடுக.
விடை:
(வரைப்படப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும் )
X. கட்டக வினாக்கள்:
1. 180 வருடத்திற்கு மேலாக ஆட்சிபுரிந்த 18 முடியரசுகளைப் பட்டியலிடுக
விடை: பாமினி அரசுகள்
2. கிருஷ்ண தேவராயருக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த பாமினி சுல்தானைக் குறிப்பிடுக
விடை: முகமதுஷா
3. கிருஷ்ணதேவராயர் சமஸ்கிருதத்தில் எழுதிய புத்தகத்தைக் கூறுக
விடை: ஜாம்பவதி கல்யாணம்
4. ஹசன் பாமன் ஷா தமது தலைநகரை எங்கு மாற்றினார்?
விடை: குல்பர்கா
XI. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது):
1. தமிழ்நாட்டில் விஜயநகரப் பேரரசின் கலை மற்றும் கட்டடக் கலையின் வடிவில் அமைந்துள்ள கோவில்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து வருக.
2. வகுப்பறையில் தெனாலிராம கிருஷ்ணாவின் கதைகளை வகுப்பில் படித்துக் காட்டுக.
Other Important Links for 7th Std Social Book Back Solutions Tamil:
Click Here to download Complete Samacheer Kalvi 7th Social Book Back Answers in Tamil- 7th Social Science Book Back Answers Tamil