7th Tamil Term 3 Chapter 3.2 – தன்னை அறிதல் Book Back Questions with Answers:
Samacheer Kalvi 7th Standard New Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below. The Samacheer Kalvi Class 7 New Tamil Book Back Answers Term 3 Chapter 3.2 – தன்னை அறிதல் Tamil Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 7th Std Tamil Book Portion consists of 21 Units. Check Unit-wise and Full Class 7th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 7th Tamil Book back answers below:
English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 7th Standard Tamil Book Back Answers and 7th Tamil guide Book Back Answers PDF. See below for the New 7th Tamil Book Back Questions with Answer PDF:
7th Samacheer Kalvi Book – unit 3.2 தன்னை அறிதல் Tamil Book Back Answers/Solution PDF:
Samacheer Kalvi 7th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.
7th Tamil Samacheer Kalvi Book Back Answers
Term 3 Chapter 3.2 – தன்னை அறிதல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கூடு கட்டத் தெரியாத பறவை…..
அ) காக்கை
ஆ) குயில்
இ) சிட்டுக்குருவி
ஈ) தூக்கணாங்குருவி
Answer: ஆ) குயில்
2. தானொரு ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) தா + ஒரு
ஆ) தான் + னொரு
இ) தான் + ஒரு
ஈ) தானே + ஒரு
Answer: இ) தான் + ஒரு
குறுவினா:
1. ‘காக்கை ஏன் குயில் குஞ்சைப் போகச் சொன்னது?
Answer:
காக்கை குயில் குஞ்சைப் போகச் சொன்னதற்கான காரணம் : குயிலினத்திற்கென்று தனித்தன்மையுண்டு. காக்கையினத்திற்கென்று தனித்தன்மையுண்டு. இரண்டும் சேர்ந்து ஒரே கூட்டில் வாழ இயலாது என்பதால் காக்கை, குயில் குஞ்சைப் போகச் சொன்னது.
2. குயில் குஞ்சு தன்னை எப்போது ‘குயில்’ என உணர்ந்தது?
Answer:
குயில் குஞ்சு ஒரு விடியற்காலையில் “கூ” என்று கூவியது. தன் குரல் இனிமையானது என்று அறிந்தது. அப்போது தான் அது தான் ஒரு குயில் என்பதை உணர்ந்தது.
சிறுவினா:
1. குயில் குஞ்சு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்கிய நிகழ்வை எழுதுக.
Answer:
குயில் குஞ்சு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்கிய நிகழ்வு :
(i) குயில் ஒன்று காக்கையின் கூட்டில் முட்டையிடுகிறது. முட்டையிலிருந்து வெளிவந்த குயில் குஞ்சு தன்னைக் காக்கைக் குஞ்சாக எண்ணிக் காக்கையைப் போலவே கரைய முயல்கிறது.
(ii) தனியே சென்று வாழ அஞ்சுகிறது. ஒரு விடியற்காலையில் கூ’ என்று கூவியது. தான் குயில் என்பதையும் தன் குரல் இனிமையானது என்பதனையும் உணர்ந்த பிறகு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்குகிறது.
(iii) நாமும் நமது ஆற்றலை உணர்ந்து கொண்டால் வாழ்வில் சாதனைகளைப் புரியலாம் என்பதை இந்நிகழ்வு மூலம் உணரலாம்.
சிந்தனை வினா:
1. உங்களிடம் உள்ள தனித்தன்மைகளாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
என்னிடம் உள்ள தனித்தன்மைகள் :
- அனைவரிடமும் அன்புடன் பழகுதல்
- பிறருக்கு உதவி செய்தல்
- பகைவரிடமும் அன்பு பாராட்டுதல்
- இன்முகத்துடன் இருத்தல்
- இனிமையாகப் பேசுதல்
- பிறர் குறைகளைக் கூறாமை
- பிறருடைய நிறைகளை மட்டும் கூறுதல்
- பெரியோரை மதித்தல்.
கற்பவை கற்றபின்:
பறவைகள், விலங்குகள் ஆகியவற்றுக்கு உரிய தனித்தன்மைகளைப் பட்டியலிடுக.
Other Important links for 7th std Tamil Book Answers:
Click Here to download the complete 7th Tamil Book Back Answers – Samacheer Kalvi 7th Tamil Book Back Answers