9th Science – Chemistry – Unit 10 Book Back Questions with Answers in Tamil:
Samacheer Kalvi 9th Std Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Science uploaded and available below. 9th Standard New Science Syllabus 2022 – வேதியியல் 10 – நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் Science Book Back Answers available for both English and Tamil mediums. Tamil Nadu Samacheer Kalvi 9th Science Book Portion consists of 25 Units. Science Book Contain Physics 09 units, Chemistry 07 units, Biology 08 units and Computer Science 01 units in Tamil. Check Unit-wise and Full Class 9th Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download for both English and Tamil Medium. Samacheer Kalvi 9th Science Book back Solutions/Answers below:
English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Science Book Back Answers and 9th Science Solution guide Book Back Answers PDF. See below for the New 9th Science Book Back Questions with Answer PDF:
Samacheer Kalvi 9th Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Science Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.
அலகு 10: நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் Book Back Answers in Tamil
வேதியியல் – அலகு 10
நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. மிக அதிக வேகத்தில் சுழலச் செய்து, கனமான பொருட்களிலிருந்து லேசான பொருட்களைப் பிரித்தெடுக்கும் முறை _________.
அ) வடிகட்டல்
ஆ) வண்டல்
இ) சாய்த்து வடித்தல்
ஈ) மைய விலக்கம்
விடை: ஈ) மைய விலக்கம்
2. பின்வருவனவற்றுள் _________________ ஒரு கலவை
அ) சாதாரண உப்பு
ஆ) தூய வெள்ளி
இ) கார்பன் டை ஆக்ஸைடு
ஈ) சாறு
விடை: ஈ) சாறு
3. ஒரு துளி மையினை நாம் நீரில் கலக்கும் போது நமக்குக் கிடைப்பது ________.
அ) பலபடித்தான கலவை
ஆ) சேர்மம்
இ) ஒருப்படித்தான கலவை
ஈ) தொங்கல்
விடை: இ) ஒருபடித்தான கலவை
4. கரைப்பானைக் கொண்டு சாறு இறக்குதல் முறையில் __________ அவசியம்
அ) பிரிபுனல்
ஆ) வடிதாள்
இ) மைய விலக்கு இயந்திரம்
ஈ) சல்லடை
விடை: அ) பிரிபுனல்
5. ___________ மாதிரி முழுவதும் ஒரே பண்புகளைக் கொண்டுள்ளது.
அ) தூயபொருள்
ஆ) கலவை
இ) கூழ்மம்
ஈ) தொங்கல்
விடை: அ) தூயபொருள்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. __________ விடைகள் கலவையின் இயைபுப் பொருள்களுக்கு வேறுபடுத்தக்கூடிய எல்லைக்கோடு இல்லை.
விடை: ஒருபடித்தான
2. பதங்கமாகும் பொருளுக்கு எடுத்துக்காட்டு _________________.
விடை: உலர் பனிக்கட்டி
3. நீரிலிருந்து ஆல்கஹால் _________________ மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது.
விடை: பின்னக் காய்ச்சி வடித்தல்
4. பெட்ரோலிய சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படும் பிரித்தெடுத்தல் முறை _________________.
விடை: பின்னக் காய்ச்சி வடித்தல்
5. வண்ணப்பிரிகை முறை _________________ தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
விடை: ஒரே கரைப்பானில் வெவ்வேறாகக் கரையும் திறன்
III. சரியா? தவறா? எனக் தவறெனில் திருத்துக:
1. எண்ணெய் மற்றும் தண்ணீர் இரண்டும் ஒன்றில் ஒன்று கலவாதது
விடை : சரி
2. வேதிமுறையில் ஒரு சேர்மத்தை தனிமங்களாக பிரிக்க முடியாது.
விடை :
தவறு. வேதிமுறையில் ஒரு சேர்மத்தை எளிய பொருட்களாக உடைக்க முடியும்.
3. திரவ-திரவ கூழ்மங்கள் களிம்பு எனப்படும்
விடை :
தவறு. திரவம் – திண்ம கூழ்மங்கள் களிம்பு எனப்படும்.
4. மோர் ஒரு பலபடித்தான கலவைக்கு எடுத்துக்காட்டாகும்
விடை : சரி
5. ஆஸ்பிரின் தனது நிறையில் 60% கார்பன், 4.5% ஹைட்ரஜன் மற்றும் 35.5% ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது. ஆஸ்பிரின் ஒரு கலவை
விடை :
தவறு. ஆஸ்பிரின் நிறையில் 60% கார்பன், 4.5% ஹைட்ரஜன் மற்றும் 35.5% ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது. ஆஸ்பிரின் ஒரு சேர்மம்.
IV. பொருத்துக:
V. மிகச் சுருக்கமாக விடையளி:
1. பரப்புக் கவரப்படும் பொருள் மற்றும் பரப்புக் கவரும் பொருள் என்றால் என்ன?
விடை:
பரப்புக் கவரப்படும் பொருள் :
ஒரு பொருள் மற்றொரு பொருளின் மேற்பரப்பில் ஒட்டி கொள்ளும் பொருளாகும்
பரப்புக் கவரும் பொருள் :
ஒரு பொருளை தன் மேற்பரப்பில் கவரப்படும் பொருளாகும்.
2. பதங்கமாதல் – வரையறு.
விடை:
சில திண்மப்பொருட்களை வெப்பப்படுத்தும் போது, அவை திரவநிலையை அடையாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறுதல், எ.கா. உலர் பனிக்கட்டி
3. டெட்டாலின் சிறு துளிகளை நீரில் கலக்கும்போது கலங்கலாக மாறுகிறது. ஏன்?
விடை:
டெட்டாலில் உள்ள திரவத் துளிகள் நீர் மூலக் கூறுகளுக்கிடையே விரவுவதால் கலவை கலங்கலாகமாறுகிறது.
4. கீழ்கண்ட கலவைகளின் கூறுகளைப் பிரித்தெடுக்கப் பயன்படும் சாதனங்களைப் பெயரிடு.
விடை:
1. ஒன்றாக கலக்கும் திரவங்கள் – விடை – பின்னக் காய்ச்சி வடிக்கும் குடுவை குழாய்
2. ஒன்றாக கலவாத திரவங்கள் – விடை – பிரிபுனல்
5. கீழே கொடுக்கப்பட்டுள்ள கலவைகளின் பகுதிப் பொருட்களைப் பெயரிடுக.
i) பனிக்கூழ்
ii) எலுமிச்சை பானம்
iii) காற்று
iv) மண்
விடை:
VI. சுருக்கமாக விடையளி:
1. பின்வருவனவற்றுள் எவை தூய பொருட்கள்?
(பனிக்கூழ், பால், இரும்பு, ஹைட்ரோகுளோரிக் அமிலம், பாதரசம், செங்கல் மற்றும் நீரி)
விடை:
தூய பொருட்கள் – பனிக்கூழ், இரும்பு, பாதரசம், ஹைட்ரோகுளோரிக் அமிலம், நீர்.
2. நாம் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் மிகவும் முக்கியமானது. அது காற்றில் 21% கன அளவு உள்ளது. அது ஒரு தனிமமா அல்லது சேர்மமா?
விடை:
ஆக்ஸிஜன் ஒரு தனிமம்
3. 22 காரட்தங்கத்திலான ஒரு பதக்கத்தினை நீ வென்றிருக்கிறாய். அதன் தூய்மையை எவ்வாறு கண்டறிவாய்?
விடை:
- 22 காரட் தங்க பதக்கத்தில் 91.6% தங்கம் மற்றும் 8.4% இதர உலோகங்கள் உள்ளது.
- எனவே, இது ஒரு தூய்மையற்ற பொருள்.
4. மரத்தூள், இரும்புத் துகள் மற்றும் நாப்தலீன் கலந்த கலவையை எவ்வாறு பிரிக்கலாம்?
விடை:
- காந்தப்பிரிப்பு முறையில் கலவையில் உள்ள இரும்புத் துகள்களை முதலில் பிரிக்க வேண்டும்.
- மரத்தூள் மற்றும் நாப்தலீனை பதங்கமாதல் முறையில் பிரிக்கலாம்.
5. ஒரு படித்தானக் கரைசல், பலபடித்தான கரைசலிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
விடை:
VII. நெடுவினா:
1. தனிமங்களுக்கும், சேர்மங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதி ஒவ்வொன்றிற்க்கும் ஒரு எடுத்துக்காட்டு தருக.
விடை:
2. டிண்டால் விளைவு மற்றும் பிரௌனியன் இயக்கம் ஆகியவற்றை தகுந்த வரை படத்துடன் விளக்குக.
விடை:
1. டிண்டால் விளைவு
வலுவான ஒளிக்கற்றையை கூழ்மக் கரைசலின் வழியே செலுத்தும்போது, ஒளிக்கற்றையின் பாதையைப் பார்க்கமுடிகிறது. இந்நிகழ்வே ‘டிண்டால் விளைவு எனப்படும்.
இந்நிகழ்விற்கு காரணம்: கூழ்மத்துகள்களால் ஒளியானது சிதறடிக்கப்படுவதே ஆகும்.
2. பிரௌனியன் நகர்வு
விடை:
கூழ்மக் கரைசல்களை நுண்ணோக்கி வழியாகப் பார்க்கும்போது, கூழ்மத்துகள்கள் அங்கும் இங்குமாக ஒழுங்கற்ற முறையில் சீராகவும் வேகமாகவும் நகர்வதைக் காணமுடிகிறது. இந்நகர்வே, பிரௌனியன் நகர்வு எனப்படும்.
காரணம்: பரவல் ஊடக மூலக்கூறுகள் பரவிய நிலைமை மூலக்கூறுகளை சமநிலையற்ற முறையில் தாக்குவதேயாகும்.
3. எளிய உப்பு, எண்ணெய் மற்றும் நீர் ஆகியவை கலந்த கலவை எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது?
விடை:
(பல்வேறு முறைகளை ஒன்று சேர்த்து நீ பயன்படுத்தலாம்.)
- பிரிபுனலில் நீர் மற்றும் எண்ணெய் கலவையை ஊற்றி கலக்கவும்.
- சில நிமிடங்களுக்குப் பின் நீர் கீழடுக்காகவும், எண்ணெய் மேல் அடுக்காகவும் மிதக்கிறது.
- பிரிபுனலின் நிறுத்துக் குழாயைத் திறந்து நீர் மற்றும் எண்ணெய் தனித்தனி கலன்களில் சேகரிக்கவும்.
நீரைக்காய்ச்சி உப்பை பிரித்தல் :
-
- உப்புக் கலந்த நீரை குடுவையில் எடுத்துக் கொதிக்கும் வரை சூடுபடுத்தவும்.
- ஆவியானது குளிர்விக்கப்பட்டு தூய நீராக சேகரிக்கப்படுகிறது. 3. உப்பு குடுவையின் அடியில் தங்கிவிடுகிறது.
Other Important links for 9th Science Book Back Answers in Tamil:
Click Here to Download Samacheer Kalvi 9th Science Book Back Answers in Tamil – Samacheer Kalvi 9th Science Book Back Answers in Tamil